ஆஸ்திரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது துருக்கி | Euro Cup 2024

லைப்சிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் 2-1 என்றகோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது துருக்கி அணி.

ஜெர்மனியின் லைப்சிக் மைதானத்தில் நேற்று நடைபெற்றநாக்-அவுட் சுற்றின் கடைசி ஆட்டத்தில் துருக்கி - ஆஸ்திரியாஅணிகள் மோதின. முதல் நிமிடத்திலேயே துருக்கி கோல் அடித்து அசத்தியது. கார்னரில் இருந்து அர்டா குலர் அடித்த பந்தை அப்துல்கரிம் பர்தாக்கி துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரை கடந்து கோல் கம்பத்துக்கு நெருக்கமாக நின்ற ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப் பாம்கார்ட்னரிடம் சென்றது. அவர், அதை விலக்கிவிட முயன்ற போது அருகில் நின்றமற்றொரு டிபன்டரான ஸ்டீபன் போஷின் காலில் பட்டு கோல்கீப்பரான பேட்ரிக் பென்ட்ஸ் வசம் சென்றது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post