குல்தீப், அஸ்வின் சுழலில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து: இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்ப்பு

தரம்சாலா: இந்திய அணிக்கு எதிரான கடைசிமற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்து வீச்சில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தரம்சாலாவில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிராவ்லி சீரான தொடக்கம் கொடுத்தார். அதேவேளையில் மறுமுனையில் பென் டக்கெட் நிலைத்து நின்று விளையாடினார். 18 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post