ENG vs NZ 2-வது ஒருநாள் போட்டி | 79 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

சவுதாம்ப்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழை காரணமாக இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் தலா 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

நியூஸிலாந்து அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடர் சமனில் முடிந்தது. பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி சவுதாம்ப்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post