
கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டால் போட்டியை மறுநாள் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவடைந்து தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் ஆட்டம் லாகூரில் நடைபெற்ற நிலையில் மீதம் உள்ள 5 ஆட்டங்களும் இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games