
லாகூர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை அணி.
37.1 ஓவர்களில் 292 ரன்கள் என்ற இலக்கை எட்டினால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் சேஸிங் செய்து வந்தது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 32 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 65 ரன்களும், ஹஷ்மதுல்லா ஷகிடி 59 ரன்களும் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இதேபோல், ரஹ்மத் ஷா 45 ரன்கள் சேர்த்தார். கடைசி கட்டத்தில் ரஷித் கான் அதிரடியாக ஆடி 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாலும் 1 பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட, முஜீப் ரஹ்மான் மற்றும் ஃபரூக்கி அடுத்தடுத்து அவுட்டானதால் ஆல் அவுட்டாகினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games