செங்டு: உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் ஆஷி சவுக்சி, மனினி கவுஷிக் மற்றும் சிஃப்ட் கவுர் சாம்ரா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி இறுதிப் போட்டியில் 3,527 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது. சீன அணி 3,525 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், செக்குடியரசு அணி 3,499 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games