WI vs IND முதல் டெஸ்ட் | இந்திய அணி 162 ரன்கள் முன்னிலை: ஜெய்ஸ்வால் அபார ஆட்டம்

டொமினிகா: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. டொமினிகாவில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 64.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post