ஆளுநரின் செயலுக்கு எதிராக முதல்வர் எடுத்த நடவடிக்கை ஆக்ஷனுக்கு ஏற்ற ரியாக்ஷன் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், ஆளுனராக நாகலாந்தில் பல குழப்பங்களை செய்துவிட்டு தண்டனை பணியாக தமிழ்நாட்டிற்கு வந்தவர்தான் தமிழக ஆளுநர் ரவி. ஆளுநரின் செயலுக்கு எதிராக முதல்வர் எடுத்த நடவடிக்கை ஆக்ஷனுக்கு ஏற்ற ரியாக்ஷன் என தெரிவித்தவர் தொடர்ந்து...
சேது சமுத்திர திட்டத்தை அதன் இயற்கை தன்மை பாதிக்கப்படாதவாறு கவனமுடன் நிறைவேற்ற வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபரீதத்தில் முதலமைச்சராக வந்தவர். அவருக்கு பாராளுமன்ற ஜனநாயகம் பற்றி தெரியாது. அதனால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஆதரிப்பதாக கூறுகிறார்.
போதைப் பொருள் விவாகாரத்தை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். போதைப் பொருளை பயன்படுத்துபவர்களை விட அதனை விற்பனை செய்பவர்களுக்கு தான் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News