”என்னயா காட்டுக்குள்ள அனுப்ப பாக்குற..” முதுமலையில் வனத்துறை வாகனத்தை விரட்டியடித்த யானை!

முதுமலை சாலையில் காட்டு யானை ஒன்று குறுக்கே நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளது. இந்நிலையில் காட்டு யானையை வனத்துறையினர் வனத்திற்குள் அனுப்ப முயன்ற போது, கோபமடைந்த காட்டு யானை வனத்துறையினரின் வாகனத்தை துரத்தியுள்ளது.

image

சாலைக்கு வந்த காட்டு யானை, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது. இதனால் பெங்களூரு சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

image

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப முயற்சித்தனர். ஆனால், வனத்துறையினர் வாகனத்தை யானை விரட்ட துவங்கியது. பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு வனத்திற்குள் யானை சென்றதும் போக்குவரத்து சீரானது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post