
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலுக்கு நேற்று வருகை தந்த துர்கா ஸ்டாலின் சுமார் 40 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்தார். புத்து மூலவர், அங்காள பரமேஸ்வரி உற்சவர் அங்காள பரமேஸ்வரி பெரியாயி உள்ளிட்ட இடங்களில் சாமி தரிசனம் செய்தார் .மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஸ்டாலின் குடும்பத்தினரின் குலதெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News