ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 12 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவர்கள் தங்களுடைய மீன்பிடித் தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் மிகுந்த கவலையடைந்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News