தென்காசி: மாணவி தற்கொலை விவகாரம் - பேராசிரியர்கள் இருவர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இந்து பிரியா, அங்குள்ள மனோ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். செய்யாத தவறுக்காக மன்னிப்புக் கடிதம் தர வேண்டுமென பேராசிரியர்கள் அவரை நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த இந்து பிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

image

தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, மாணவர்கள், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புளியங்குடி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேராசிரியர்கள் வளர்மதி, முத்துமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post