
தமிழக காவல்துறை சைபர் வழக்குகளில் திட்டமிட்டு பாரபட்சம் காட்டுவதாக விமர்சித்த தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, 17 மாநிலங்களில் தங்களது ஆட்சி இருப்பதால், சட்டப்படி யார்மீது எங்கு வேண்டும் என்றாலும் வழக்கு தொடுக்கமுடியும் என எச்சரித்தார்.
மகாகவி பாரதியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில், பாரதியார் படத்திற்கு, அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக காவல்துறையை திமுக மாவட்டச் செயலாளர்கள்தான் வழிநடத்துவதாக விமர்சித்தார். தமிழக காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவிவிட்டதாகவும் கூறினார்.
மாநகர காவல் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் எப்படி இறந்தார்...? அவர் அநாதையா...?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News