'தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை' - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், நீரை காய்ச்சி குடிக்க வேண்டும், மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் மக்கள் தொண்டாற்றும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர் என தமிழிசை கூறியுள்ளார்.
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post