விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.
தளவானூர் என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஓராண்டுக்கு முன்பு 25 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த நிலையில், தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையில் ஏற்பட்டுள்ள உடைப்பை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். கடந்த முறை தடுப்பணையின் மறுமுனையில் உடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியில் நீர் திறப்பு 5,000 கன அடியாக அதிகரிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News