
சென்னை மெரினாவில் அமையவுள்ள கருணாநிதி நினைவிட கட்டுமானப் பணிகளுக்கு அனுமதிகள் கோரி விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது.
2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடி செலவில் மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 24 இல் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்பின்னர் கருணாநிதி நினைவிடப்பணிகள் குறித்து கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனையும் மேற்கொண்டிருந்தார். இந்த சூழலில் பொதுப்பணித்துறையினர் தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் ஒப்புதலையடுத்து கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திடம் கட்டுமான அனுமதிக்கு திட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதிகள் கிடைத்த பிறகு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News