இன்று பிரதமரை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

ஆறு நாள் பயணமாக தமிழக ஆளுநர் டெல்லி சென்றுள்ளார். பிரதமர் உடனான சந்திப்பின் போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post