வரும் 30ஆம் தேதி துணைவேந்தர்களுடன் தமிழக ஆளுநர் ஆலோசனை

தமிழகத்தில் உள்ள துணை வேந்தர்கள், உயர்கல்வித் துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், வருகிற 30ஆம் தேதி காலை 11மணி அளவில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. அனைத்து பல்கலைக்கழங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஆலோசனைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. புதிய ஆளுநர் பொறுப்பேற்றால் இது போன்ற ஆலோசனை நடைபெறுவது வழக்கமானது என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post