“நம் மீது வெளியே பாய்ந்தாலும் உள்ளே பாராட்டுவர்” - ஆஸ்திரேலியர் குறித்து கோலி மனம் திறப்பு

விராட் கோலி தனது கடைசி ஆஸ்திரேலியப் பயணத்தில் ஆடி வருகிறார். ஆஸ்திரேலியர்களின் குணாதிசயம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் விராட் கோலி.

நேற்று பெர்த் பவுன்ஸி பிட்சில் முதல் ஒருநாள் போட்டியில் மழை இடையூறு காரணமாக இந்திய அணி சோபிக்க முடியாமல் தோற்றது. இதில் விராட் கோலி ஆஸ்திரேலிய பவுன்ஸ் பிட்சில் எப்படி ஆடக்கூடாதோ அப்படி ஆடி அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதாவது முன்னங்காலை முன்னால் நீட்டி ஆஃப் ஸ்டம்ப் பந்தை ட்ரைவ் ஆடினால் இந்தியப் பிட்ச்களில் பந்து கவர் திசையில் செல்லும் அல்லது மிட் ஆஃபில் செல்லும். ஆனால் ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் அதிகமிருப்பதால் அங்கு இந்த ஷாட்டை ஆட முடியாது, பந்தை முழுக்க வரவிட்டுத்தான் ஆட வேண்டும், ஆனால் நேற்று கோலி இந்த கிளாசிக் தவறைச் செய்து ஆட்டமிழந்தார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post