சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம்: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: பூ​டானில் இருந்து சொகுசு கார்​கள் இறக்​குமதி செய்த விவ​காரம் தொடர்​பாக சென்​னை​யில் நடிகர் துல்​கர் சல்​மான், அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம், கேரளா​வில் மொத்​தம் 17 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தி​யுள்​ளனர்.

மலை​யாள திரை​யுல​கின் முன்​னணி கதா​நாயர்​களில் ஒரு​வர் துல்​கர் சல்​மான். பிரபல நடிகர் மம்​முட்​டி​யின் மகனான இவர், தயாரிப்​பாள​ராக​வும் உள்​ளார். இந்​நிலை​யில், துல்​கர் சல்​மான் போலி ஆவணங்​கள் மூல​மாக சொகுசு கார்​களை குறைந்த விலைக்கு வாங்​கிய​தாக​ சுங்​கத்​துறை அதி​காரி​களுக்கு புகார் சென்​றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post