
புதுடெல்லி: ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 13 முதல் 15-ம் தேதிக்குள் நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வீரர்கள் ஏலம் தொடர்பாக அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐ நிர்வாகிகளிடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு இதுதொடர்பாக இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் இம்முறை ஏலம் வெளிநாட்டில் நடைபெறுமா? என்பதும் தெரியவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் வீரர்கள் ஏலம் வெளிநாடுகளில்தான் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இம்முறை மினி வீரர்கள் ஏலத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games