
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர் உரிமையை ரூ.579 கோடிக்கு பெற்றுள்ளது அப்போலோ டயர்ஸ் நிறுவனம். சுமார் இரண்டரை ஆண்டு காலத்துக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல்.
இந்த காலகட்டத்தில் சுமார் 121 இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐசிசி நடத்தும் தொடரில் 21 போட்டிகள் என இந்தியா விளையாடுகிறது. கேன்வா மற்றும் ஜே.கே சிமெண்ட் நிறுவனம் இந்த ஏலத்தில் பங்கேற்றது. இருப்பினும் அதில் அதிக தொகையை கோரியிருந்த அப்போலோ டயர்ஸ் நிறுவனம், ஸ்பான்சர் உரிமையை பெற்றுள்ளது. இதன்படி பார்த்தால் இந்திய அணி ஆடும் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் சுமார் 4.77 கோடி ரூபாய் வரை அப்போலோ டயர்ஸ் செலவிடும் என தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games