ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது நியூஸி.

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. புலவாயோ நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 60.3 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் இர்வின் 39, தஃபட்ஸ்வா சிகா 30, நிக் வெல்ச் 27 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் மேட் ஹன்றி 6, நேதன் ஸ்மித் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 26 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 90 ரன்​கள் எடுத்​திருந்​தது. வில் யங் 41, டேவன் கான்வே 51 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடியது. வில் யங் மேற்​கொண்டு ரன்​கள் சேர்க்​காத நிலை​யில் முசா​ராபனி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post