
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரவீந்திர ஜடேஜா கடைசி வரை போராடி 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களும், இந்தியா 387 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தில் 62.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40. பென் ஸ்டோக்ஸ் 33, ஹாரி புரூக் 23 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games