
சென்னை: இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியின் 3-வது சீசன் வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இம்முறை போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசுத் தொகையும் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட், அமெரிக்காவின் லியாங் அவோன்டர், ஜெர்மனி யின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் ரே ராப்சன், ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோசீவ் மற்றும் 2024-ல் சேலஞ்சர்ஸ் பிரிவில் வென்றதன் மூலம் முன்னேறியுள்ள இந்தியாவின் வி.பிரணவ் ஆகியோர் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games