
ஜெய்ப்பூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் யஷ் தயாள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது ராஜஸ்தான் மாநில காவல் துறை.
27 வயதான அவர், ஏற்கெனவே உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், அவர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனெர் சதார் காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games