‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘இதயம் முரளி’ படத்துக்காக தயாராகி வரும் நடிகை கயாடு லோஹர், சில புகைப்படங்களுடன் அப்டேட் தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“கடந்த இரு வாரங்களாக ‘டிராகன்’ பட ரிலீஸ் தந்த அனுபவம் அனைத்தும் நிஜமாகவே நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. இதற்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். அதேநேரத்தில், இப்போது தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக லுக் டெஸ்டில் ஈடுபட்டது ஸ்பெஷல் தருணம். ‘இதயம் முரளி’ படத்துக்காகவே இந்த லுக் டெஸ்ட். ‘இதயம் முரளி’ மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Cinema