பளுதூக்குதலில் மீராபாய் சானுவுக்கு 4ஆம் இடம்: நூலிழையில் பறிபோன இந்தியாவின் பதக்க வாய்ப்பு!

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்தியாவின் மீராபாய் சானு நூலிழையில் பதக்கத்தைத் தவறவிட்டார்.

சீன வீராங்கனை ஹோ ஸூஹி 206 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ருமேனியாவின் மிஹேலா வாலண்டினா காம்பே 205 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். தாய்லாந்து வீராங்கனை சுரோத்சனா காம்போ மொத்தம் 200 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை தக்கவைத்தார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post