754 ரன்கள் குவிக்கப்பட்ட டெல்லியில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இன்று மோதல்

புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ள டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் கூட்டாக 754 ரன்கள் வேட்டையாடப் பட்டிருந்தது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post