“போய் ஆஸ்கர் கொண்டு வா!” - ரஜினி சொன்னதை நினைவுகூர்ந்து நெகிழ்ந்த ‘2018’ இயக்குநர்

கேரளா: ‘2018’ படத்தின் இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அற்புதமாக தொடங்கிய நாள்” என உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லைகா தயாரிக்கும் ‘ரஜினி 170’ படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன், 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார். அவர் தவிர, ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே களமிறங்குகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post