
லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் தொடரில் 0-2 என அந்த அணி பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனும் பேட்டிங் வரிசையில் 3வது வீரராகவும் களமிறங்கும் ஆலி போப் காயம் காரணமாக தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகி உள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் பீல்டிங்கின் போது ஆலி போப்பிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளதால் ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games