
'அன்னக்கிளி', 'ரோஜா' போலத்தான் 'வெயில்' திரைப்படமும் தமிழ் சினிமாவுக்கும் இசையுலகுக்கும் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. இயக்குநர் வசந்தபாலனின் 'வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்திருந்தார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
"பானை சோற்றின் பதமறிய பருக்கை போதும்" என்பதை போல, அந்தப் படத்தின் பாடல்களும், வெற்றியும் ஜிவியை திரும்பிய பக்கமெல்லாம் கொண்டுபோய் சேர்த்திருந்தது. கரிசல் மண் பூமியில் கந்தக நெடி கலந்த காற்றெங்கும் பற்ற வைக்காமலேயே வெடித்துச் சிதறி பரவியது ஜி.வி.பிரகாஷின் இசையும் பாடல்களும்.
June 13, 2023 at 05:14PM
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Cinema