போடாத சாலைக்கு ₹5 கோடி பட்டுவாடா ? -அறப்போர் இயக்கம்!

சாலை போடாமலேயே 5 கோடி ரூபாயை ஒப்பந்ததாரருக்கு பட்டுவாடா செய்ததாக கரூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம்
குற்றம்சாட்டியுள்ளது.

இதுபற்றி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட ஆதாரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று அறப்போர் இயக்கத்தினர் அறிக்கை ஒன்றில் குற்றம்சாட்டியுள்ளனர்.

குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது பற்றி விளக்கமளிக்க வேண்டுமென அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post