
பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு இடங்களில் கரை உடைந்துள்ளது.
ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையில் இருந்து 17000 கனஅடி உபரி நீர் ஆரணியாற்றில் திறக்கப்பட்டதால் சோமஞ்சேரியில் கரை உடைந்தது. அதேபோல் வஞ்சிவாக்கம் என்ற பகுதியிலும் கரை உடைந்தது. இதையடுத்து சம்பவ இடங்களில் வசிக்கும் மக்களை, ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், தலைமையிலான வருவாய் துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News